முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட கரூர் மக்களுக்காக களத்தில் நின்று காப்பாற்றியது யார், இரவு பகல் பாராமல் உதவியது யார் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அந்தச் செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்து, மக்களின் உயிரைக் காத்து துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்ற முனையாமல் தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார் என்றும், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் “ஓடு… ஓடு… ஓடு…” எனக் குறிப்பிட்டு மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம்
மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம் தெருவில் தாறுமாறாக






