சென்னை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தற்போது 38 சதவீதத்திலிருந்து 4% உயர்த்தப்பட்டு, 42 சதவீதமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று முன்தேதியிட்டு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசை பின்பற்றி ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 3 முறை தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் காலம் தாழ்த்தி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை காலம் தாழ்த்தாமல் ஜனவரி 1ம் தேதி அன்று முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






