அட்டை கம்பெனியில் தீ விபத்து : சாத்தூரில் பரபரப்பு….

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கோவில்பட்டி நான்குவழிச் சாலை பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அட்டை தயார் செய்யும் கம்பெனி உள்ளது. இதன் வளாகத்தில் அட்டை தயார் செய்வதற்கு பயன்படுத்தும் 1,500 டன் பழைய பேப்பர்கள், அட்டைகளை பண்டல்களாக கட்டி அடுக்கி வைத்திருந்தனர். இங்கு நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது. மேலும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. தீ விபத்தில் 500 டன் பழைய பேப்பர்கள் எரிந்தது. இதன் மதிப்பு பல லட்சம் மதிப்புடையவை என தெரிய வந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அட்டை கம்பெனியில் தீ விபத்து : சாத்தூரில் பரபரப்பு….

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.