அமெரிக்காவில் 20 வயது இந்திய மாணவர் சித்தரவதை – போலிசார் மீட்பு

அமெரிக்காவில் எப்பொழுதும் இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டில் 20 வயது இந்திய மாணவருக்கு அவரது உறவினர்கள் மூலமே கொடுமை நடந்துள்ளது.

அமெரிக்காவில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல் பல மாதங்களாக வீட்டில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்ட 20 வயது இந்திய மாணவரை போலீசார் மீட்டுள்ளனர். அந்த மாணவரை கொடூரமாக தாக்கி, மூன்று வீடுகளில் அவரை பணி செய்ய வேண்டும் என அவரது உறவினர் மற்றும் இருவர் அவரை வற்புறுத்திய நிலையில் அதிகாரிகள் அந்த இந்திய மாணவரை மீட்டனர்.

கடந்த புதன்கிழமை, செயின்ட் சார்லஸ் கவுண்டியில் உள்ள ஒரு கிராமப்புற நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் வெங்கடேஷ் ஆர் சத்தாரு, ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா மற்றும் நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரை கைது செய்தனர். இந்த சூழலில் நேற்று வியாழக்கிழமை அவர்கள் மீது மனித கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பகுதியில் வசித்து வந்த ஒரு நபர், அந்த இந்திய மாணவர் படும் வேதனைகளை கண்டு 911 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற போலீசார் மூவரை கைது செய்து, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த 20 வயது இந்திய மாணவரை மீட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அதே நேரத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள பல எலும்பு முறிவுகளுக்காக இப்பொது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அவரது முழு உடலையும் ஆய்வு செய்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர் ஜோ மெக்கல்லோக் தெரிவித்தார்.

ஏழு மாதங்களுக்கும் மேலாக, அந்த மாணவர்கள் அந்த மாணவனை கட்டிடத்தின் ஒரு அடித்தளத்தில் பூட்டி வைத்து, குளியலறைக்கு கூட பயன்படுத்த அந்த மாணவனுக்கு அனுமதி தரவில்லை, சரியாக கட்டிமுடிக்கப்படாத தரையில் உறங்கும்படி அந்த மாணவனை கட்டாயப்படுத்தினர். மின்சார கம்பி, PVC குழாய், உலோகக் கம்பிகள், மரப் பலகைகள், குச்சிகள் மற்றும் ஒரு சலவை இயந்திரத்திற்கான நீர் விநியோகம் செய்யும் குழாய் ஆகியவற்றால் அந்த மாணவன் தாக்கப்பட்டார் என சொல்லப்படுகிறது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

அமெரிக்காவில் 20 வயது இந்திய மாணவர் சித்தரவதை – போலிசார் மீட்பு

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு