“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”
-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிர்வாக இயக்குனர் சு.வினித் ஐஏஎஸ் அவர்களிடம் நேரில் புகார் மனு. செய்திக்குறிப்பு.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 2025 பிப்ரவரி 1ம் தேதி முதல் அறிவிக்கப்படாத விலை உயர்வை ஒரு டப்புக்கு (12லிட்டர் பால் பாக்கெட்) கூடுதலாக 3.00ரூபாய் பால் முகவர்களிடம் கட்டாயப்படுத்தி தான் வசூலிப்பதோடு பிற மொத்த விநியோகஸ்தர்களையும் தன்னொடு கூட்டு சேர்த்துக் கொண்டு பால் முகவர்களை மிரட்டி வரும் தென் சென்னை ஆவின் மொத்த விநியோகஸ்தர் புஷ்பராஜ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவின் நிர்வாக இயக்குனர் திரு வினித் ஐஏஎஸ் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே (301.2025, 01.02.2025) மின்னஞ்சல் மற்றும் பதிவுத் தபால் வாயிலாக புகார் மனு அனுப்பியிருந்தோம்.ஆனால் சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில் நிர்ணயிக்கப்படாத விற்பனை விலையை உயர்த்தும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்து ஆவின் அதிகாரிகள் தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட தென் சென்னை மொத்த விநியோகஸ்தர் புஷ்பராஜ் அவர்கள் ரெடிமேட் கடிதம் தயார் செய்து வைத்துக் கொண்டு அதில் தங்களை புஷ்பராஜ் அவர்கள் மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கவில்லை என்றும், அவருக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய போக்குவரத்து செலவு கட்டுபடியாகாத காரணத்தால் பால் முகவர்களாகிய நாங்கள் தான் விருப்பம் கொண்டு டப்புக்கு 3.00ரூபாய் கூடுதலாக தருவதாகவும் டைப் செய்து வைத்துக் கொண்டு அந்த கடிதத்தில் கையெழுத்திட்டால் தான் ஆவின் பால் விநியோகம் செய்வோம் என மிரட்டி நிர்பந்தம் செய்ய தொடங்கியிருக்கிறார்.இதனால் பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் தரப்பிலிருந்து பால் முகவர்களை மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (05.02.2025) பிற்பகல் 1.45மணியளவில் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு சு.வினித் ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சார்பில் நேரில் சந்தித்து ஆவின் பாலுக்கு அறிவிக்கப்படாத விலை உயர்வை பால் முகவர்களிடம் திணிக்கும் ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் எஸ்.முருகன், மாநில துணைத் தலைவர் எஸ்.பால்துரை, மாநில இணைச் செயலாளர் ஜி.பவுல் சந்தோசம் ஆகியோர் அடங்கிய மாநில நிர்வாகிகள் புகார் மனு அளித்தோம்.அப்போது புகார் மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸ் அவர்கள் எங்களிடம் சுமார் 20நிமிடங்களுக்கு மேல் பால் முகவர்களின் குறைகள் குறித்தும், மொத்த விநியோகஸ்தர்களின் அடக்குமுறை குறித்தும் கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400