இந்தூர்: இந்தியா வந்துள்ள ஆஸி. அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், 3வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கியது.. இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டாலும், தொடரை வெல்ல வேண்டும் என்றால் இன்னொரு வெற்றி தேவைப்படுகிறது. அது 3வது டெஸ்டிலேயே சாத்தியப்பட்டால் சிறப்பாக அமையும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும், டாட் மர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.







