டிரினிடாட்:
மேற்கிந்திய தீவில் நடைபெற்ற அந்நாட்டுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளது.
இந்தியா & மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்றது. ஏற்கெனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சம பலத்துடன் இருந்தன. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் வீரர்கள் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. ஆனால், 351 ரன்கள் குவித்தனர். சுப்மன் கில் 85 ரன், இஷான் கிஷன் 73 ரன், சஞ்சு சாம்சன் 51 ரன், ஹர்திக் பாண்ட்யா 70 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டி மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது என்று பதிவாகியுள்ளது.
அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 2009-ம் ஆண்டு கென்னிங்டன் மைதானத்தில் 339 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
சதம் இல்லாமல் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 350 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 349 ரன்கள் இந்தியா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 351 ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர். இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-&1 என கைப்பற்றியுள்ளது.







