இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், , அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்சுபோத் சிங், , (Mr. Subodh Singh, I.R.S.) மதுக்கர் குமார்,இ.வ.ப., (Mr. Madhukar Kumar, I.R.S.,) கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்.லலிதா, இ.ஆ.ப., (கூடுதல் ஆணையாளர் (வ. (ம.) நி.)), டாக்டர் ஜி. எஸ். சமீரன், (இணை ஆணையாளர் (பணிகள்)), ஷரண்யா அறி, (துணை ஆணையாளர் (கல்வி)), மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 8: அறவாழிஅந்தணன்தாள்சேர்ந்தார்க்குஅல்லால்பிறவாழி நீந்தல் அரிது. குறள்





