புதுடெல்லி:
ஆதார் பெறுவதற்கு தகுதி வாய்ந்த கைவிரல்கள் இல்லாத மற்றும் தெளிவில்லாத விரல் ரேகை உடையவர்களுக்கு மாற்று பயோமெட்ரிக் மூலமாக ஆதார் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
ஒருவர் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவராக இருக்கும் கைரேகை, கருவிழி ஸ்கேன் என இரண்டையும் வழங்க முடியாதவர்கள் இரண்டடையுமே சமர்பிக்காமல் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யலாம். அத்தகைய நபர்களுக்கு பயோமெட்ரிக் விதிவிலக்கு பதிவு வழிகாட்டுதலின் கீழ் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி/ ஆண்டு ஆகிய தகவல்களுடன் சமர்பிக்க வேண்டும்” என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.







