கொண்டாடு உன்னை

தமிழர் என்றால் தனி மக்கள்
தமிழர் என்றால் தனி அறிவு
தமிழர் என்றால் பொது குணங்கள்
தமிழர் என்றால் புகழ் மதிப்பு
தமிழர் என்பது நம் அடையாளம்
தமிழர் என்பது நம் பெருமைகள் ஆம்
தமிழர் என்பது தனிக் குலமாம்
தமிழர் என்பது ஆழ் மனமாம்
தமிழர் என்றால் பொருள் விரிவாம்!
தமிழர் என்றால் இசை முழக்கும்
தமிழர் என்றால் தனி நிலையாம்
தமிழர் என்றால் புது மழையாம்..
தமிழர் நின்றால் முரசொலிக்கும்
தமிழர் நடந்தால் கதை படிக்கும்
தமிழர் எழுந்தால் வான் இடிக்கும்
தமிழர் அயர்ந்தால் உழைப்பி ருக்கும்!
தமிழர் உண்டால் பொது விருக்கும்
தமிழர் மகிழ்ந்தால் கொடை பிறக்கும்
தமிழர் கலந்தால் மனம் குளிக்கும்!
தமிழர் என்போர் அவர் நாமாம்
தமிழர் என்போர் படை நாமாம்
தமிழர் என்போர் அணி நாமாம்
தமிழர் என்போர் ஒரு சேர்வாம்!
தமிழர் தமிழர் தமிழவராய்
தமிழர் தமிழர் புகழ் பதிவாய்
தமிழர் தமிழர் என நினைவாய்
தமிழர் தமிழர் என படிப்பாய்..
தமிழர் தமிழர் என ஒட்டுறவாய்
தமிழர் அல்லார் வெறும் வானம்.
தமிழர் அல்லார்க் கொள்கை அவமானம்
தமிழர் என்பதே அதுநம் தன்மானம்
தமிழர் தானே பிறருக்கும் உவமேயம்!
தமிழர் என்பதே நமக்கு தொடுவானம்
தமிழர் தொன்மை வாழணும் எடுமுடிவாய்!
தமிழர் என்பதை உரைத்தே பதிவிடுவாய்!
தமிழர் உரிமைகள் வேண்டி நீ தொழுவாய்!
தமிழர் மேன்மைகள் ஆளணும் எருவிடுவாய்!
தமிழர் வழியை மாற்றும் புறங்கடைகள்
தமிழர் வாழ்வை கெடுக்கும் சில தடைகள்..
தமிழர் என்பதை எடுத்துநீ சீராட்டு..
தமிழர் ஒற்றுமையை நீ பாராட்டு
தமிழர் என்பதே நமக்கு உயிர் மூச்சு
தமிழர் என்பதுதான் நம் முடியாட்சி!
தமிழர் என்றே நில்இனி உள்ளே!.
தமிழர் என்பதில் தானே பெருமைகள் அண்ணே..
தமிழர் வாழ்ந்திட வேண்டி பணியாற்று முன்னே!
தமிழர் வாழ்வில் சுடர்பட ஒளியேற்று மன்னே!.
தமிழர்! தமிழர்! என கொண்டாடு உன்னை!..பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொண்டாடு உன்னை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.