சீமான் திட்டவட்டம் – எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கபோவதில்லை…

ராமநாதபுரம்: வரும் 2024 மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். தனித்துப் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தற்போது 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க முடியாது.

யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் என்ற நிலை உள்ளது. ஆளுநர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். சனாதனக் கோட்பாடு பற்றி பேசாமல் ஆளுநர் அவரது வேலையை பார்க்க வேண்டும். திமுக தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்குவோம் எனறு மக்களிடம் சொல்லியிருந்தது. ஆனால் தற்போது பல நிபந்தனைகளை தி.மு.கு அரசு விதித்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் திமுக, அதிமுக பணத்தை நம்பியே போட்டியிடுகின்றன. திமுக விளம்பர அரசியல் செய்கிறது. தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். தனித்து தான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராசேந்திரன், மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார், வெங்குளம் ராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சீமான் திட்டவட்டம் – எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கபோவதில்லை…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு