முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதிப்பிட்டீல் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ் குமார், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







