சைதாப்பேட்டையில் போதை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது

சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் போதை பொருட்கள் வைத்திருந்ததாக ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தீவிர போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மேற்கு சைதாப்பேட்டை பஸ்நிலையம் அருகே சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடியை சேர்ந்த அருள் (வயது 22) என்பதும், சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சரண் (19) என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சைதாப்பேட்டை குமரன் நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1014 போதை மாத்திரைகள், 12 போதை ஊசிகள், 5 ஹான்ஸ் ஒரு பாக்கெட் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சைதாப்பேட்டையில் போதை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு