சோம்பு பற்றிய மருத்துவ பயன்பாட்டை அறிந்துக்கொள்ளுங்கள்..!

செரிமான சக்தியைத் தூண்டி விடுவதில் சோம்பு ஒரு பங்கு வகிக்கிறது. அதன்காரணமாகதான், அசைவ உணவைச் சாப்பிட்ட பின்பு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும், செரிமான சக்தி அதிகமாவதுடன் வாய் துர்நாற்றமும் நீங்கும். நாள்தோறும் காலையில் அரை தேக்கரண்டி, சோம்பை மென்று சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம்பெறும். நமது உடலில் உள்ள நச்சுக்கள் யாவும் நீங்கி, கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் தொடர்ந்து சோம்பை சேர்த்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராகும்.

மலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மை சோம்புக்கு உண்டு. நாள்தோறும் சிறிதளவு சோம்பை சாப்பிட்டு வந்தாலே போதும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளை சோம்பு நிவர்த்தி செய்கிறது. சோம்பை இலேசாக வறுத்துப்பொடி செய்து வேளை ஒன்றுக்கு 2 கிராம் வீதம் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிணிகள் நீங்கிவிடும்.

இரவில் உறக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் சோம்புத் தண்ணீரைத் தினமும் குடித்து வந்தால், இரவில் நன்றாகத் தூக்கம் வரும். மேலும், மூளை சுறுசுறுப்பாகவும். புத்துணர்ச்சியுடனும் இருக்கும். சோம்பை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும். உடல் சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தருகிறது சோம்பு.

சோம்புக் கீரையில், விட்டமின் ஏ, விட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயமின், விட்டமின் பி6, பாந்தனிக் அமிலம், மினரல்ஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க், காப்பர் என உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது சோம்புக்கீரை உணவில் சேர்ப்பது நல்லது.

நூறு கிராம் ஃப்ரஷ் கீரையில் 43 கலோரிகள் அடங்கியிருக்கின்றன. அதனால், தினந்தோறும் ஏழுகிராம் இலைகள் வரை ஒருவர் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக அமெரிக்கன் வேளாண் விஞ்ஞானிகள் கூறினார்கள்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சோம்பு பற்றிய மருத்துவ பயன்பாட்டை அறிந்துக்கொள்ளுங்கள்..!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு