துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அடையாறு நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக ‘துளிர் ஊட்டச்சத்து பெட்டகங்களை’ வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் திரு. R. குமார் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், துளிர் அமைப்பின் நிர்வாகிகள் Dr பால வெங்கடராமன், பிரகாஷ், ரம்ய லக்ஷ்மி, மகேஸ்வரி மோகன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி
சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது






