ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது
சென்னை செந்தாமஸ் மவுண்ட் பகுதியில் உள்ள மாண்ட்போர்ட் மேல்நிலைப் பள்ளியில், ஈகை ராஜ் சிலம்பப் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய “மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி – 2026” நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்ந நிகழ்வில் ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசான் மற்றும் சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஆர். சந்துரு அவர்கள் தலைமையில் சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு
சிறப்பு விருந்தினராக மனிதநேய மிக்கவர் எஸ் எஸ் எல் எப் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ஜி. சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா. அருள் பிரகாசம், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசான் சந்துரு பேசுகையில் இந்தக் கலையில் வெற்றி பெற்று பெறுகின்ற சான்றிதழ்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டில் இந்த கலையை சேர்க்க வேண்டும் என்றும் இதனால் மாணவர் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும்
சிலம்பக் கலையை இளைஞர்கள் மத்தியில் மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநில அளவிலான போட்டி விளையாட்டு ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்று தெரிவித்தார். இதில் மூத்த ஆசான் என். வெங்கையா, MTC
R.சந்துரு, ஆசான்கள்
இ.ஹேமாமாலினி மற்றும் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள்
வி. பாலாஜி, எஸ்.பிரஜேஷ்,
சி.எம் கிருத்திகா,
பி ஆர் மனிஷா ஹர்ஷினி, பிஆர் நித்திலன் மற்றும் ஈகைராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







