சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை ராயபுரம் பகுதியில் அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துள்ளார் ஸ்டாலின். அந்த பகுதி மக்களுக்கு வீடு ஒதுக்கப்படாமல் வெளிப்பகுதி மக்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை. அமளி பூங்காவாக உள்ளது. பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டார். குற்ற செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்தும் கடமையிலிருந்து ஸ்டாலின் தவறிவிட்டார். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட வேண்டும். திமுகவின் கைக்கூலி தான் ஓபிஎஸ். தேர்தலுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் மீண்டும் இணைவது ஓபிஎஸ், தினகரன், சசிகலாவுக்கு பொருந்தாது என்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






