மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து…

மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்தக் கோயில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வியாழக்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருவார்கள். பொதுமக்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை சாய்பாபா கோவிலில் வழிபடச் செல்வார்கள். தற்போது அங்கு கோபுரக் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, வெடிக்கப்பட்ட ராக்கெட் பட்டாசு ஒன்று கோபுரக் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த ஓலை மறைப்பின் மீது விழுந்தது. அப்போது ஓலையில் தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சம்பவ இடத்தை அடைந்தன. கோபுரத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர் சுமார் அரைமணிநேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. சீக்கிரம் தீ அணைக்கப்பட்டதால், தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சாய்பாபா கோவில் அசம்பாவித சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.