நேற்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், காணொலி காட்சியின் வாயிலாக மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், துணை ஆணையாளர்கள் ஷரண்யா அறி, (கல்வி), எம்.பி.அமித், (தெற்கு வட்டாரம்), கே.ஜெ.பிரவீன்குமார், (மத்திய வட்டாரம்), கட்டா ரவி தேஷா, (வடக்கு வட்டாரம்), தனியார் வானிலை ஆர்வலர் ஆர்.பிரதீப் ஜான், தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






