தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பிற்பகல் 3 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர் பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் நிலையில் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இந்த உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல்வர் நியமித்துள்ளனர். உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






