செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.2.99 கோடி மதிப்பீட்டிலான 8 புதிய அரசு கட்டிடங்களை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் மருத்துவம் மற்றும் மககள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். உடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை துணை இயக்குநர் மரு.பரணிதரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.பாபு கணேஷ், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.எஸ்.சங்கீதா பாரதிராஜன், மேடவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சிவபூஷனம் ரவி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.








