வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, செகந்திராபாத், மும்பை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மும்பை பாந்த்ரா ரயில்நிலையம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில்(09047) பாந்த்ரா ரயில்நிலையத்தில் இருந்து நாளை(ஆக.27) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- மும்பை வதோரா சிறப்பு கட்டண ரயில்(09048) ஆக.29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 5.30 மணிக்கு வதோரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

இதேபோல, செகந்திராபாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரயில்( 07125) செப்.4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07126) செப்.6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரயில்(07127) செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து செப்.8-ம் தேதி காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07128) செப்.10-ம் தேதி வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு