நேற்று நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அகற்றப்பட்ட நீர்த்தேக்கங்கள், விழுந்த மரங்கள் மற்றும் குப்பைகள், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், சீரான மின் விநியோகம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட களப்பணி நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஹனீஸ் சாப்ரா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகராட்சி நிருவாக இயக்குநர் சு.சிவராசு, காணொலிக் காட்சியின் வாயிலாக மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






