மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (22.01.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், சுமார் 5000 பேர் பயன்படுத்தும் வகையில், ஒரு மணி நேரத்திற்கு 1000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் கருவியினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி, ஒருங்கிணைப்பு அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.