சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி காலமானார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அந்த இரங்கல் செய்தியில், “முன்னாள் முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது, அவரது தயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





