சென்னை:
கனமழை, பலத்த காற்று வீசியதால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துள்ளானது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 7 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் இடிபாடுக்கும் கந்தசாமி, ராஜசேகர் என்கின்ற இரு ஊழியர்களும் 4 பொதுமக்களும் சிக்கி படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





