கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் பலி

சென்னை :
சென்னை கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனை பட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர் இன்று மின்சாரம் தாக்கி பலியானார்.
சென்னை கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ரூ. 230 கோடி மதிப்பீட்டில், 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் உடையதாக, 1000 படுக்கைகளுடன்கூடிய இந்த மருத்துவமனைக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 1.4.2022 அன்று தொடங்கிய இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள், மே மாதம் 15-ம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் இந்த மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் ஏராளமான வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டிட பணியின் போது இன்று மாலை மின்சாரம் தாக்கியது. உடனயி£க அவர் சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்க கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கிண்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் பலி

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு