சர்க்கரை நோய் என்பது சில வருடங்களுக்கு முன்பு வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய நோயாக இருந்தது. ஆனால் இப்பொழுது பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் என பலருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இது நமக்கு உள்ளது என்றால் நம் உடலில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக் கொள்வதற்கு கொய்யா இலை உதவுகிறது. 5 கொய்யா இலை, 2 வேப்பிலை , 2 மா இலை (மா இலை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை பராமரிக்கிறது) ஆகிய மூன்றையும் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
இதை 200 மி.லி தண்ணீரில் போட்டு,100 மி.லி ஆக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும். கொதித்த பின்னர் இதை எடுத்து குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் வெரும்வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் 20 கிராம் வரை வெந்தயத்தை உட்கொள்ளலாம். ஒவ்வொரு உணவிலும் வெந்தயத்தை சேர்த்து கொள்ளலாம். இரவில் வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தயத்தை முளைகட்டி வைத்து அதை தினமும் காலையில் சாப்பிடலாம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






