சிஐடி நகர் பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் 10வது மண்டலம், வார்டு 133 மற்றும் வார்டு 141க்குட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி (தியாகராய நகர்), த.வேலு (மயிலாப்பூர்), துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மை செயலாளரும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்) டாக்டர். ஜி.எஸ்.சமீரன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்), நே.சிற்றரசு, ஆளுங்கட்சி தலைவர் ஆர்.ராமலிங்கம், நியமனக் குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், தலைமை பொறியாளர் (கட்டடம்) எஸ்.காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிஐடி நகர் பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.