சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து கடந்த 7ம் தேதி முதல் சென்னை சாஸ்திரிபவனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் நேரம் அவரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்ததற்கு மருத்துவ குழுவினர் தடுத்தனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இரவில் விசாரணை வேண்டாம் என்று கூறியதையடுத்து அந்த முடிவை கைவிட்டனர். இதையடுத்து தினமும் 8 மணி நேரம் அவரை தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. தினமும் 8 மணி நேரம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இந்தநிலையில் இன்று காலை 8,30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை இந்த விசாரணை தொடர உள்ளது.
இந்த நிலையில் இரண்டு பேர் கொண்ட குழு ஒன்று விசாரணை அறைக்கு வெளியே கையில் பெரிய சூட்கேசுடன் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் யார்? ஏன் இப்படி நிற்கிறார்கள் என்கிற குழப்படம் நீடித்தது. ஏற்கனவே பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இறுதியில் இதற்கு பதில் கிடைத்தது. ஆனால் பெரிய விஷயமாக கருதப்பட்டது புஷ் என்று ஆகிவிட்டது.
ஆம், விசாரணை அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் என்று தகவல் வெளியானது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் மருத்துவ உதவிக்காக வந்தவர்கள். உள்ளே சென்றால் விசாரணையில் கேட்கப்படும் விஷயங்கள் கசியும் என்பதால் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் சிகிச்சை நடந்தது. அது போன்ற சமயங்களில் இப்போது விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு உடலநலக்குறைபாடு, ரத்த கொதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அவசர தேவைக்காக மருந்துகளோடு மருத்துவர்கள் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் செந்தில் பாலாஜியை தினமும் விசாரணை முடிந்ததும் தூங்க செல்வதற்கு முன் ஒருமுறை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜி உடல்நிலையில் கவனம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்து அமலாக்கத்துறையினர் கவனமாக பார்த்துக்கொள்வதாக உறுதியளித்த நிலையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






