சென்னை:
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிற்நுட்ப உதவியாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கூட்டம் மாநில செயலாளர த.சாமிநாதன¢ தலைமையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செ.குணசேகரன், மாநில செயற்குழு ம.உதயகுமார் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்திற்கு ர.சக்கரபாணி, மு.சங்கவி, மு.திலிபன், அ.முகிலன், சு.விஜயன், வேலுப்பிள்ளை, பதிஸ்வரன், நாச்சிமுத்து, ரா.சந்திரசேகர், த.குமார், க.செல்லதுரை, இ.இளஞ்சுடன், பா.இளம்பிறை உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கவன ஈர்ப்பு கூட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய பணியாளர் சுபாஷ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு பணி வழங்க வேண்டும். சாத்தியமற்ற தவணை அடிப்படை முறையை ( எப்.டி.ஓ. பேசிஸ்) முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலாக பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வர உள்ள கே.வி.வி.டி மற்றும் ஏ.வி.வி.டி வீட்டு திட்ட பணிகளை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஊதிய குறைப்பு நடவடிக்கை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். மதிப்பூதியத்தை நிறுத்திவிட்டு நிரந்தர தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.. வெளிச்சந்தை மூலம் பணியமர்த்தும் முறையை முற்றிலும் கைவிட வேண்டும். மாதா மாதம்வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்.
பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சாலை அமைப்பு ணகிளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் மற்ற திட்ட பணிகளின் பங்களிப்பை வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் ஏற்படுகின்ற காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். குறித்த ஊதியத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மகப்பேறு காலங்களில் பணியாற்றும் மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். எங்களுக்கான ஊதியத்தை எங்களின் கணக்கிற்கு நேரடியாக செலுத்த வேண்டும். சாத்தியமற்ற பணிகளுக்கு எங்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்களை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் கி.சதிஷ்குமார் நன்றி கூறினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






