மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் சென்னையின் பல்வேறு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே பதினேழு இயக்கத்திற்கு மக்கள் தொடர்ந்து உதவிகள் கேட்டு அழைப்பு விடுக்கின்றனர். தகவல் அறிந்து தோழர்கள் நேரில் சென்று பாதிப்பை பார்வையிட்டு சில இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புயலினால் மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடக்கப்பட்டிருப்பதாலும், வீடுகள், பொருட்கள் சேதமடைந்திருப்பதாலும் அன்றாடத் தேவைகளை சந்திக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றிற்கெல்லாம் முறையான இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும் என அரசினை வலியுறுத்தும் அதே நேரத்தில், மக்களை விரைந்து மீட்டெடுக்க பணிகளை வேகமாக முன்நகர்த்த நாம் கைக்கோர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளுக்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் இறங்கியுள்ளார்கள். அரிசி, எண்ணெய், குடிநீர், அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் தார்பாய், பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகிறது. நிவாரணப் பணிகளுக்கான தங்கள் நிதிப் பங்களிப்பினை செய்ய முடிகிற தோழர்கள் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நிவாரணப் பொருட்கள், உடைகள் போன்றவற்றையும் அளிக்கலாம்.
A/C Number: 99980118853691
A/C Name: PUGAZHENTHI
A/C Type: Savings
Bank: Federal Bank
Branch: Panruti
IFSC: FDRL0001968
MICR: 607049202
SWIFT: FDRLINBBIBD
Google Pay (GPay): 8098111543
பொருளாதாரத் தேவைகளை சந்திக்க மே பதினேழு இயக்கத்திற்கு துணை நிற்குமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.






