தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது
தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் சென்னை ஆவடி மோரை திருமலைநகர் பாபா கோவில் அருகில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு அவர்கள் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் வில்லிவாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர் மணிமாறன், வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் விஜய பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு அவர்களுக்கு மோரை திருமலை நகர் ஆறுமுகம் மற்றும் ஆர். ஜெயபால் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார். இதில் திருமலை நகர் ஆறுமுகம் மற்றும் ஆர். ஜெயபால், பிரகாஷ், ஜே. சுரேஷ், விக்னேஷ், எஸ். சந்திரகாந்த், பிரபு, நிஷாந்த், மணிகண்டன், ரவி, ஸ்ரீதர், சீனு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







