தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கி 5,000 கோழிகள் தீயில் கருகி இறப்பு

தருமபுரி:
தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் மின்னலும் தாக்குகிறது. அதன்படி தருமபுரி அருகே திருப்பதி என்பவருக்கு சொந்தமான 360 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட கோழிப்பண்ணையில் 5,000 கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இன்று அதிகாலையில் பண்ணையின் மேல் இடி தாக்கியதால் பண்ணை முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
இதை கண்ட திருப்பதியின் சகோதரர் பதறியடித்து ஒட்டி சென்று தனது தம்பி திருப்தியிடம் பண்ணை தீ பிடித்தது பற்றி தெரிவித்துள்ளார். திருப்பதி, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
திருப்பதியின் அண்ணன் மகன் பிரபு என்பவர் அரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே பண்ணையில் இருந்த 5,000 கோழிகள் தீயில் எரிந்து நாசமாகின.
பண்ணையில் ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கி 5,000 கோழிகள் தீயில் கருகி இறப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.