15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று. (குறள்: 150)
விளக்கம்:
அறத்தைத் தனக்குரியதாகக் கொள்ளாமல் தீவினைகளைச் செய்துவருவானாயினும் பிறனுக்குரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. விரும்பினால் அவன் கொலை செய்யப்படுவது உறுதி. மற்ற தீவினைகளின் பயன் இவனுக்குச் சேர்வதற்கு முன்பு இந்தத் தீவினையின் பயன் உடனே வந்து சேரும்.







