19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது, தீதாகப் பேசாதிருத்தல்
==================================================================
துன்னினார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு (குறள் 188)
விளக்கம்
தனக்கு நெருக்கமானவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர் அயலாரிடத்து என்னதான் செய்யமாட்டார்?







