1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 7. மக்கட்பேறு
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – குறள் : 67
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை கற்றோர் அவையில் மற்றவர்களை விட முதன்மை இடத்தில் விளங்குமாறு மகனைக் கல்விமான் ஆக்குதலாகும்.







