1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (குறள் 131)
விளக்கம்:
ஒழுக்கம் அனைவருக்கும் சிறப்பைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரைவிட, மேலானதாகப் பேணிக் காக்கப்பட வேண்டும்.






