அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி வெளியீடு : சென்னை மாநகராட்சி பள்ளிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்
79.11 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளிகளில் 1.20 இலட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

2023-2024ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 7,311 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 5,784 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவீதம் 79.11 ஆகும்.  

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணிதப் பாடத்தில் 24 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 4 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 5 மாணவர்கள் என மொத்தம் 33 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற பள்ளிகள்:

நுங்கம்பாக்கம்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், தரமணி-சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் சோழபுரம்-சென்னை உயர்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 500 மதிப்பெண்களுக்கு 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், ரங்கராஜபுரம்-சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 500 மதிப்பெண்களுக்கு 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், தரமணி-சென்னை மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், புத்தா தெரு – சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மதிப்பெண்கள் அடிப்படையில் 192 மாணவ, மாணவியர்கள் 451 மதிப்பெண்களுக்கு மேலும், 601 மாணவ. மாணவியர்கள் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 917 மாணவ, மாணவியர்கள் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கனால் பேங்க் மற்றும் ரங்கராஜபுரம் சென்னை உயர்நிலைப்பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்தையும், மேற்கு மாம்பலம்-சென்னை உயர்நிலைப்பள்ளி  98.44 சதவீதத் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், நுங்கம்பாக்கம்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கண்ணம்மாபேட்டை-சென்னை உயர்நிலைப்பள்ளி 98 சதவீதத் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், ஸ்ட்ராஹன்ஸ் சாலை-சென்னை உயர்நிலைப்பள்ளி 97.44 சதவீதத் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், பாடிக்குப்பம் சாலை மற்றும் காமராஜ் அவென்யூ சென்னை உயர்நிலைப்பள்ளிகள் 97.06 சதவீதத் தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி வெளியீடு : சென்னை மாநகராட்சி பள்ளிகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர