நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாதிரியார் பெனடிக் ஆன்றோவை மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில் பெனடிக் ஆன்றோ மீது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் 11-ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே அவரை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பாதிரியார் பெனடிக் ஆன்றோவை மீண்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரணை செய்த நீதிபதி ஒரு நாள் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பாதிரியார் பெனடிக் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது மேலும் ஒரு பெண் புகார் செய்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சைபர் கிரைம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





