கோட்டுச்சேரி காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சமுதாய நலப்பணித் திட்டம் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் பேசுகையில், போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், உடல் உபாதைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கல்வி பாதிக்கும் சூழல் உண்டாகும். இதை தவிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள், தேவையான சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






