மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு முழுவதும் 10 வாரங்கள் நடைபெற உள்ள 10 ஆயிரம் மழைக்கால சிறப்பு முகாம்களைத் தொடங்கி வைக்கும் விதமாக, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 138க்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்), கா.கணபதி (மதுரவாயல்), கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், நிலைக்குழுத் தலைவர் (கணக்கு) க.தனசேகரன், மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருத்துவர் டி.சி.செல்வவிநாயகம், மாமன்ற உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்,

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






