சம்பிரதாயத்திற்காக நடக்கும் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு பெறும் கூட்டங்கள் தேவையா ?
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்களை பெரும் நிகழ்வு நடந்து வருகிறது. ஆனால் மனுக்களைபெற்று நடவடிக்கை எடுக்க வேண்டி,சம்பந்தப்பட்ட கீழ்மட்ட துறை ரீதியான அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தொடர் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்கிறார். ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியரால் பெறப்பட்ட பெரும்பாலான மனுக்களுக்கு
தீர்வோ நடவடிக்கையோ கிடைக்காமல் மீண்டும் மீண்டும் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை சுற்றியே பாதிக்கப்பட்ட மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் இந்த பரிதாபத்தை உணர்ந்த இந்த பாவத்தை ஊதியமாக பணமாக மாற்றத் தெரிந்த புரோக்கர்களும் சில போலி அரசியல்வாதிகளும் உங்களுக்கு உடனடி தீர்வு வேண்டுமானால் இவ்வளவு பணம் கொடுத்தால் நான் ஆபீஸ்ரிடம் பேசுகிறேன் பலன் கிடைக்கும் என்று பசப்பு வார்த்தைகள் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி செல்கின்றனர் .
ஆனால் சில சமயங்களில் இந்த பாவப்பட்ட ஜனங்களிடம் இருந்து பெறப்படும் அந்த பணம் துறை ரீதியான அலுவலர்களின் பாக்கெட்டுகளுக்கு செல்லும் பொழுது கேட்ட வேலையும் நடந்துவிடுகிறது.
இப்படிப்பட்ட அவலமான கேவலமான ஒரு நடைமுறையை கீழ் மட்டத்தில் நடப்பதை மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்புவோம் என்று யாராவது சொன்னால் “நீ ஒன்றும் எங்களை புடுங்க முடியாது கலெக்டரே எங்களை ஒன்றும் செய்ய முடியாது, எங்களைப் பாதுகாப்பதற்கு அரசு அலுவலர்கள் ,ஊழியர்கள் சங்கம் இருக்கிறது .நீ ஒன்றும் செய்ய முடியாது போ என்று அலட்சியமான பதிலே அலுவலர்களிடம் இருந்து பெறப்படுகிறது
இதனால் நொந்து போன, வெந்து போன பொதுமக்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் பரிதவிக்கும் நிலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவுகிறது,







