தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் அருணபாரதி முகநூல் கணக்கு திடீரென்று முடக்கபட்டது, அக்கணக்கும் அதிலுள்ள படங்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் கடந்த மாதம் அழிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க எடுத்த முயற்சிகளும் கைகொடுக்கவில்லை. திடீரென்று வேறொருவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு, அருண்பாரதி பயன்படுத்தி வரும் முகநூல் கணக்கை எடுத்துக் கொள்ளுவது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. இதுகுறுித்து முகநூல் நிர்வாகத்திடம் முறையிட்டு செய்தும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளைக் காண்பித்தும் கூட, முகநூல் நிர்வாகம் அப்பழையக் கணக்கை மீட்டுத் தர மறுக்கின்றனர். எனவே, அம்முயற்சியைக் கைவிட்டு, இந்த புதிய பக்கத்தைத் அருணபாரதி தொடங்கியுள்ளார்.
பக்கம் – http://www.facebook.com/arunabharathittp
இந்த புதிய பக்கத்தில் விருப்பம் (LIKE) தெரிவித்து இணைந்து, அருணபாரதி பதிவுகளைப் பெறுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நிலைமை இப்படி இருக்கையில் முகநூல் பயண்பாட்டாளர்கள் அனைவரும் இனி எச்சரிக்கையுடன் இருக்கும்படி தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.






