அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்-2) பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினைஇன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்சென்று தங்களது விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறுகூட்டல் – அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 31-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் முதல் ஜூன் 3-ந்தேதி மாலை 5 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.







