தாம்பரம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது… இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தெரு மீனாட்சியம்மன் நகர் ஜெ.ஆர். நகர், திருமால் நகர் போன்ற பகுதிகள் முழுவதும் மழை நீர் சூழந்துள்ளது… ஏராளமான வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது…
பல்லாவரம் வருவாய் துறையோ, தாம்பரம் வருவாய் துறையோ, மேயரோ துணை மேயரோ அரசியல் பிரமுகர்களோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் அதிகாரம்-2 வான் சிறப்பு வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியின் சிறப்பு. குறள்:13




