அண்டார்டிகாவில் மிகக் குறைந்த கடல் பனி உறைவு : புவி அறிவியல் அமைச்சகம்

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயுடன் இணைந்து, டாக்டர் பாபுலா ஜெனா மற்றும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் சகாக்கள் தலைமையிலான சமீபத்திய ஆய்வு, 2023-ம் ஆண்டில் வருடாந்தர பனி அதிகரிப்புக்கு முன்னதாக அண்டார்டிக் பனி விரிவாக்கம் மற்றும் பனி பின்வாங்கலில் முன்னெப்போதும் இல்லாத தடங்கல்கள் ஏற்பட்டிருக்கும் நிலைமையை அறிவித்துள்ளது. புவி வெப்பமடைதலின் பின்னணியில், கடந்த தசாப்தத்தில் ஆர்க்டிக் கடல், பனியின் குறிப்பிடத்தக்க இழப்பைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் அண்டார்டிக் 2015 வரை மிதமான அதிகரிப்பைக் கண்டது. ஆனால் 2016 முதல் திடீரெனக் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, 2016 முதல் 2023 வரை ஒவ்வொரு கோடையிலும் அண்டார்டிக் மிகக் குறைந்த கடல் பனி நிலைமைகளைக் கண்டது, 2023 இல் முன்னெப்போதும் இல்லாத வகையில், மெதுவான பனி விரிவாக்கம் அல்லது பின்வாங்கல் ஏற்பட்டது. அண்டார்டிகாவில் வருடாந்திர அதிகபட்சத்திற்கு முன்னதாக மெதுவான பனி விரிவாக்கம் 2023, செப்டம்பர் 7 அன்று 16.98 மில்லியன் சதுர கிமீட்டரில் பனி அளவு இருந்தது. இது நீண்ட கால சராசரியை விட 1.46 மில்லியன் சதுர கிமீ குறைவானது. கடல் பனிக்கட்டி மாற்றங்களின் அடிப்படைக் காரணம் விஞ்ஞான சமூகத்திற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு முக்கியமான கேள்வியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டில் பனி விரிவாக்கத்தைக் குறைக்க அதிகப்படியான கடல் வெப்பம் பங்களித்தது என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன, ஆனால் வளிமண்டல சுழற்சி மாற்றங்கள் கணிசமானவை மற்றும் முக்கிய பங்கு வகித்தன. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், துருவ மற்றும் பெருங்கடல் அறிவியலில் நாட்டின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

அண்டார்டிகாவில் மிகக் குறைந்த கடல் பனி உறைவு : புவி அறிவியல் அமைச்சகம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச