சென்னை சைத்தாப்பேட்டையில் வீருகொண்டிருக்கும் 1 நம்பர் லாட்டரி விற்பனை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீயாய் பரவிவருகிறது. கடந்த மாதங்களாகவே கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சமூக வளைதளங்களில் மக்கள் அறிந்ததே. இதை தொடர்ந்து வரும் லாட்டரி விற்பனை. இவ்வகை செயல்பாடுகளால் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வந்துதிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆண் பெண் என இருபாலருமே இதற்கு அடிமையாகி சமூக சீர்கேடான இந்த செயலை செய்துவருகிறார்கள். சென்னை சைதாப்பேட்டையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லாட்டரி விற்பனை தொடரும் நிலையில் சைதாப்பேட்டை காவல் நிலையம் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.