CBI, ED பாஜகவின் அணிகள் போல் செயல்படுறது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு….

சென்னை:
ஐ.டி, சி.பி.ஐ அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு துறைகள் பாஜகவின் அணிகள் போல் செயல்படுகிறது. என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்றார்.

banneet.in என்ற ஆன்லைன் தளம் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். போஸ்ட் கார்டு மூலம் சுமார் 8 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை சந்தித்து கையெழுத்து பெறுவேன். ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை, மருத்துவ உரிமைக்காக திமுக என்றும் பாடுபடும்.

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். நீட் விலக்கு கோரி பெறப்படும் கையெழுத்துக்கள் குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேவையில்லாத சோதனைகள் அதிகரித்துள்ளது. சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்றவை பா.ஜ.கவின் அணிகள் போல் செயல்படுகிறது என்றார் உதயநிதி ஸ்டாலின்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

CBI, ED பாஜகவின் அணிகள் போல் செயல்படுறது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு….

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு