தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள “Health Walk” திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் பந்தய சாலை மற்றும் வாலாங்குளம் பகுதியில் இன்று (27.06.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதி படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்கள். உடன்தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மதிஷில்பா பிரபாகர் சதீஸ் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, துணை மேயர் .இரா.வெற்றிச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.








